search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரத்தில் ரப்பர் விவசாயிகள் தர்ணா போராட்டம்
    X

    போராட்டத்தில் கலந்து கொண்ட ரப்பர் விவசாயிகள்.

    குலசேகரத்தில் ரப்பர் விவசாயிகள் தர்ணா போராட்டம்

    • கிலோ ஒன்றுக்கு ரூபாய் 200 வழங்கிட வேண்டும்
    • அரசே ரப்பரை கொள்முதல் செய்ய வேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் அதிக அளவு ரப்பர் பயிரிடப்படுகிறது. இங்கு பயிரிடப்படும் ரப்பர் வெளிநாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இங்கு உள்ள ரப்பர்தான் உயர்தர வகையை சார்ந்தது. ரப்பர் விவசாயிகள் நலனை பாதுகாக்க கிலோ ஒன்றுக்கு ரூபாய் 200 வழங்கிட வேண்டும், அரசே ரப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குலசேகரத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.

    தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தை வாபஸ் வாங்க கேட்டும் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தை கைவிட வேண்டும். பால் வடிப்பு தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணம் ரூ.5ஆயிரம், ஒரு மாத கால ரேஷன் இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சேகர் தொடக்க உரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட துணை தலைவர் முருகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகி வின்சென்ட், களியல் பேரூராட்சி தலைவர் ஜூலிட், திற்பரப்பு பேரூராட்சி துணை தலைவர் ஸ்டாலின்தாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர்கள் வில்சன், விஸ்வம்பரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×