search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சைமன்காலனியில் விளையாட்டு மைதானத்தில் மழைநீர் வெளியேற ஓடை அமைக்க எதிர்ப்பு
    X

    சைமன்காலனியில் விளையாட்டு மைதானத்தில் மழைநீர் வெளியேற ஓடை அமைக்க எதிர்ப்பு

    • பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
    • பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே உள்ளது சைமன்காலனி. இங்கு சுமார் 2 ஏக்கர் பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வாலிபர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாடி வருகின்றனர்.

    மழைக்காலத்தில் விளை யாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்குவதால் வாலிபர்கள் மண் போட்டுள்ளனர். இந்நிலை யில் மழைநீர் வழிந்து ஓட நேற்று வாலிபர்கள் மைதா னத்தின் தெற்கு பகுதியில் ஓடை தோண்டினர். இதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவலறிந்த ஊர் மக்கள் வாலிபர்களுக்கு ஆதரவாக அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவவலறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன், குளச்சல் கிராம வருவாய் ஆய்வாளர் முத்து பாண்டி, சைமன்காலனி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் எனல்ராஜ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு சைமன்காலனி பங்குத்தந்தை ஜிம் மற்றும் ஊர் நிர்வா கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் அரசிடம் முறையாக அனுமதி பெற்று ஓடை அமைக்க கட்டுமான பணிகள் செய்ய வேண்டும் என தாசில்தார் மற்றும் போலீசார் கூறினர். இதை வாலிபர்கள் மற்றும் ஊர் மக்கள் ஏற்க மறுத்தனர். இதற்கிடையே தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்க ளிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது.

    மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற இடையூறு இல்லாமல் மைதான கட்டுமான பணிகள் மேற்கொள்வது எனவும், இது தொடர்பாக வருகிற திங்கட்கிழமை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுப்பது எனவும் தீர்வு காணப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×