search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் 4 புறக்காவல் நிலையங்கள் சீரமைக்கும் பணி தீவிரம்
    X

    கன்னியாகுமரியில் நான்கு வழி சாலை முடியும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் சீரமைக்கும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்

    கன்னியாகுமரியில் 4 புறக்காவல் நிலையங்கள் சீரமைக்கும் பணி தீவிரம்

    • சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த போலீஸ் நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென் கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கி றார்கள்.

    குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம்17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை இங்கு சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள். இதனால் இந்த3மாத காலமும் இங்கு சபரிமலை சீசன் காலமாக கருதப்படுகிறது. மேலும் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசன காலங்களில் இங்கு வழக்கத்தை விட அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருப்பார்கள்.

    அதுமட்டுமின்றி பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய தொடர் விடுமுறை காலங்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.

    இதனால் இந்த சீசனை யொட்டி கன்னியாகுமரிக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. சீசனையொட்டி கன்னியாகுமரியில் ஷிப்ட் முறையில் போலீசார் பாதுகாப்புக் காக நியமிக்கப்பட்ட உள்ளனர்.

    இதற்காக வெளியூரில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்ட உள்ளனர். மேலும் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த கன்னியாகுமரியில் உள்ள புறக்காவல்நிலையங்களும் சீரமைக்கப்பட்டுவருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரி காந்தி மண்டப பஜார், கன்னியாகுமரியில் நான்கு வழி சாலை முடியும் சீரோ பாயிண்ட், கடற்கரை சாலையில் உள்ள இலவச கார் பார்க்கிங் அருகில் மற்றும் சன்செட் பாயிண்டுக்கு செல்லும் வழியில் உள்ள சேதமான 4 புறக்காவல் நிலையங்களும் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மேலும் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிழற்குடை புதுப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது.

    Next Story
    ×