search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    • நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தேர்வு
    • சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து ராணுவ வீரர்கள் வருகிறார்கள்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகிற

    21-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை நடக்கிறது.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மயிலாடுதுறை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்கிறார்கள். விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலமாக அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கம் ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டுள் ளது. அங்கு நடைபயிற்சி, விளையாட்டுபயிற்சி உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் விளை யாட்டு அரங்கத்திற்குள் செல்ல அடுத்த மாதம் 5-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு நடைபெறுவதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    வடசேரி உழவர் சந்தை திடல்,அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளம் பகுதி,மாநகராட்சி புதிய கட்டிடம் பகுதி யில் ஷெட்டுகள் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் ராணுவத்திற்கு இரவு நேரத்தில் ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. தினமும் 3000 பேர் பங்கேற்கும் வகையில் தேர்வு நடக்கிறது. இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்கு வசதிகளும் அங்கு செய்யப்பட்டு உள்ளது.ஆள் தேர்வு முகாம் நடை பெறுவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து ஏராளமான ராணுவ வீரர்கள் நாகர்கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.

    திருவனந்தபுரம், கோவை, சென்னையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் இன்று மதியத்துக்கு பிறகு இங்கு வருகை தருகிறார்கள். அண்ணா விளையாட்டரங்கம் ராணு வத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதையடுத்து ஆட்கள் தேர்வுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படும் போது உடற்பயிற்சி தேர்வு நடைபெறும்.அதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. ராணுவ வீரர்கள் மேற்பார்வை யில் இந்த பணிகள் அனைத்தும் மேற் கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்த பணிகளை நாளைக்குள் முடிக்க திட்ட மிட்டு உள்ளனர்.

    Next Story
    ×