search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒழுகினசேரி தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க ஏற்பாடுகள் தீவிரம்
    X

    ஒழுகினசேரி தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க ஏற்பாடுகள் தீவிரம்

    • வெண்கல சிலை சென்னையில் தயாராகிறது
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் பெரியார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் சிலை உள்ளது.

    இதையடுத்து கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க திமுக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தற்பொழுது பொது இடங்களில் சிலை வைப்பதற்கு அனுமதி இல்லாததால் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்து வருகிறார். வெங்கல சிலை அமைக்கும் பணிகளை துரிதமாக முடித்து அந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அழைத்து திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சிலை அமைப்பதற்கான பணிகள் திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் நடந்து வருகிறது. அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர் இடித்து அகற்றப்பட்டு உள்ளது.

    சிலை அமைக்கப்பட உள்ள பகுதியில் கான்கிரீட் அமைக்கப்பட்டு உள்ளது .சென்னை ஓமந்தூரார் அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை தயாரித்த தீனதயாள் என்பவர் சிலையை தயாரித்து வருகிறார்.சென்னை மீஞ்சூர் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் வெண்கலசிலை தயாராகி வருகிறது. இந்த சிலையை அடுத்த மாதத்திற்குள் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியுடன் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    Next Story
    ×