search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி-சாமித்தோப்பு பகுதிகளில் 26-ந்தேதி மின்தடை
    X

    கோப்பு படம் 

    கன்னியாகுமரி-சாமித்தோப்பு பகுதிகளில் 26-ந்தேதி மின்தடை

    • மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
    • 26-ந்தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மற்றும் கேப் கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் வருகிற 26-ந்தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, கீழ் மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்னமுட்டம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுபொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், தென்தாமரைகுளம், ஊட்டுவாள்மடம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×