search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருமனை, களியல் பகுதியில் நாளை மறுநாள் மின் தடை
    X

    அருமனை, களியல் பகுதியில் நாளை மறுநாள் மின் தடை

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மேற்குறிப்பிட்ட இடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது

    கன்னியாகுமரி :

    குழித்துறை உபக்கோட்டத்திற்குட்பட்ட கண்ணுமாமூடு, களியல், அருமனை பிரிவு களுக்குட்பட்ட சில பகுதிகளில் ஆகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின் வினியோக செயற் பொறியாளர் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கண்ணுமாமூடு பிவுக்குட்பட்ட அம்பலக்கா விளை, கொட்டற கோணம், மாங்கோடு, ஐந்துளி, மற்றும் காஞ்சியோடு ஆகிய பகுதிகளிலும், களியல் பிரிவுக்குட்பட்ட பிலாங்காலை, பீலிகோடு மற்றும் ஆலஞ்சோலை ஆகிய பகுதிகளிகளிலும், அருமனை பிரிவுக்குட்பட்ட குஞ்சாலுவிளை, காவூர்கோணம், பாம்புவளச்சான், மற்றும் காரோடு ஆகிய பகுதிகளில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மேற்குறிப்பிட்ட இடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×