search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுத பூஜையையொட்டி குமரி மார்க்கெட்டுகள், கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது
    X

    ஆயுத பூஜையையொட்டி குமரி மார்க்கெட்டுகள், கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது

    • சுற்றுலா தலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • போலீசார் கடைவீதிகளில் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    ஆயுத பூஜை விழா நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்க னவே கடந்த 8 நாட்களுக்கு முன்பு நவராத்திரி கொலு வைத்து பொதுமக்கள் வீடு களிலும், கோவில்களிலும் வழிபாடு நடத்தி வருகி றார்கள்.

    நாளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் இன்னிசை கச்சேரிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    வேப்பமூடு பகுதிகளில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்க ளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயுத பூஜை யையொட்டி இன்னிசை நிகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு போலீ சார் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்துள்ளனர். நிகழ்ச்சிகள் நடத்தும்போது போலீசாரிடம் உரிய அனுமதி பெற்று நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    ஆயுத பூஜை விழா தொடர் விடு முறையையடுத்து மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். எனவே சுற்றுலா தலங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற் கொண்டார். அங்கு பாதுகாப்பை அதி கரிக்கவும் அவர் அறி வுறுத்தினார்.

    வெளியூர்களில் இருந் தும் பஸ்கள் மற்றும் ரெயில்க ளில் ஏராளமான பொது மக்கள் சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ள னர். இதனால் பஸ்கள் மற்றும் ரெயில்களில் கூட்டம் அலைமோதி வரு கிறது. பஸ் நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் போலீ சார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். கடை வீதிக ளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. பூஜைக்கு தேவை யான காய்கனிகளை பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    எனவே மார்க்கெட்டு களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாகர் கோவில் அப்டா மார்க்கெட், கனகமூலம் சந்தை மற்றும் மார்த்தாண் டம், தக்கலை, குளச்சல், குலசேகரம் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. வெள்ள ரிக்காய், பீன்ஸ், சேனை, உள்ளி, பல்லாரி விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்து காணப்பட்டது. இதேபோல் வாழைத் தார்கள் விலையும் இன்று அதிகமாக இருந்தது.

    கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் கடைவீதிகளில் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடை வீதிகளில் சந்தேகப்ப டும்படியாக நபர்கள் சுற்றித்திரிந்தால் போலீ சாருக்கு உடனே தகவல் தெரிவிக்குமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    ஓடும் பஸ்களில் பெண் கள் கூட்டத்தை பயன் படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வரு கிறார்கள். பொதுமக்கள் எச்சரிக்கையு டன் இருக்குமாறு அறிவுறுத்தி யுள்ளனர்.

    Next Story
    ×