search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சியோன்மலை பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம்
    X

    சியோன்மலை பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம்

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • ரூ.12,95,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு

    திருவட்டார் :

    கண்ணனூர் ஊராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட சியோன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் சேதமடைந்து இருந்தது. அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரியிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று மாவட்ட பஞ்சாயத்து கமிட்டி கூட்டத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ.12,95,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கட்டிடத்தின் பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    மாவட்ட பஞ்சயாத்து கவுன்சிலர் செலின்மேரி தலைமை தாங்கினார். விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்கன்வாடியை திறந்து வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் பொது க்குழு உறுப்பினர் ரெத்தின குமார், வட்டார தலைவர் வக்கீல் ஜெபா, குமரி மேற்கு மாவட்ட பொருளாளர் ஐஜிபி. லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொதுசெய லாளர் ஜான் இக்னேசியஷ், மாவட்ட செயலாளர் பென்னட், முன்னாள் வட்டார தலைவர் ஜெக ன்ராஜ், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோன், மாவட்ட செயலாளர் ஆற்றூர் குமார், வார்டு உறுப்பினர் யோவான் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×