திருவட்டார் அருகே ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் விற்பனை கூடம்

அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார் குலசேகரம் - குளச்சல் வழித்தடத்தில தடம் எண் 332 என்ற பஸ்சையும் அவர் தொடங்கி வைத்தார்.
திருவட்டார் அருகே ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் விற்பனை கூடம்
Published on

திருவட்டார் :

திருவட்டார் பேருராட்சிக்கு உட்பட்ட திருவட்டார் பாலம் அருகே மீன் சந்தை ஒன்று செயல்பட்டு வந்தது. அதனுடன் காய்கறி கடைகளும் ரோட்டோரம் செயல்பட்டு வந்தது. சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் இங்கு வந்து தான் மீன், காய்கறிகள் வாங்கி செல்வார்கள். ஆனால் மழை காலங்களில் சந்தை பகுதிகளில் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். எனவே அந்த பகுதியில் மீன் விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜியிடம் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கை யை ஏற்று மீன் விற்பனை கூடம் கட்ட, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் நிதியினை அமைச்சர் மனோ தங்கராஜ் ஓதுக்கினார். இதனை தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் அமைச்சர் மனோதங்கராஜ் விற்பனை கூடத்தை திறந்து வைத்தார்.

விழாவுக்கு பேருராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுந்தர்ராஜ், செயல் அலுவலர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பலீலா ஆல்பன், ஆற்றூர் பேருராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், தி.மு.க. பேரூர் செயலாளர் சோழராஜன், திருவட்டார் ஒன்றிய பொருளாளர் ரமேஷ், மற்றும் தி.மு.க.வினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திற்பரப்பு பேருராட்சிக்கு உட்பட்ட சேக்கல் பகுதியில் திற்பரப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பகுதி நேர ரேசன் கடையையும் அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அஞ்சுகண்டறை பகுதியில் இருந்து குலசேகரம் - குளச்சல் வழித்தடத்தில தடம் எண் 332 என்ற பஸ்சையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜான்சன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், பேரூர் செயலாளர் ஜான் எபனே சர், திற்பரப்பு பேருராட்சி தலைவர் பொன்.ரவி, செயல் அலுவலர் விஜய குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com