search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்.அப்டா மார்க்கெட் அருகே இரட்டைப்பனை பேக்கரி திறப்பு
    X

    நாகர்.அப்டா மார்க்கெட் அருகே இரட்டைப்பனை பேக்கரி திறப்பு

    • முதல் விற்பனையை பேக்கரி உரிமையாளர் ஜெகனின் மனைவி ஷீபா தொடங்கி வைத்தார்.
    • விற்பனையாகும் அனைத்து பேக்கரி வகைகளும் இங்கே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தேரேகா ல்புதூர் அப்டா மார்க்கெட் அருகே இரட்டைப்பனை டீ ஸ்டால் இயங்கி வருகிறது. இதன் அருகே இரட்டை ப்பனை பேக்கரி நேற்று புதிதாக திறக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும் மாநகராட்சி மேயரு மான மகேஷ் தலைமை தாங்கினார். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பேக்கரி உரிமையாளர் ஜெகன் வரவேற்றார். பேக்கரியை புதுகுடியிருப்பு எல்ஷட மிஷன் ஸ்தாபகர் அருட் சகோதரி றோசம்மாள் திறந்து வைத்தார். எல்ஷட மிஷன் தலைவர் ஜான் ஜெயக்குமார் ஜெபம் செய்தார். முதல் விற்பனையை பேக்கரி உரிமையாளர் ஜெகனின் மனைவி ஷீபா தொடங்கி வைத்தார்.

    அதனை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவரும், பாரதிய ஜனதா பொருளா ளருமான முத்துராமன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேக்கரி உரிமையாளரின் குடும்பத்தி னர், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    புதிதாக திறக்கப்பட்ட பேக்கரியில் சிப்ஸ் வகை கள், இனிப்பு, கார வகைகள், பிஸ்கட், விதவிதமான அல்வா, இனிப்பு வகை, முறுக்கு, கடலை, பாரம்பரிய இனிப்பு வகைகள், பப்ஸ் வகைகள், கம்பெனி குளிர்பானங்கள், பாதாம் பால், பிரபல நிறுவனங்கள் தயாரிப்பான சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு விற்பனையாகும் அனைத்து பேக்கரி வகைகளும் இங்கே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்ப டுகிறது.

    மேலும் பேக்கரியில் பலவிதமான கேக் வகைகள் ½ கிலோ முதல் பல்வேறு எடை பிரிவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆர்ட ரின் பேரிலும் கேக்குகள் விற்பனை செய்யப்படும் என உரிமையாளர் ஜெகன் தெரிவித்தார்.

    Next Story
    ×