search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்.வீட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை
    X

    நாகர்.வீட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

    • கண்காணிப்பு காமிராவில் கொள்ளையன் உருவம் சிக்கியது
    • தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிருஷ் ணன் கோவில் முதலிமார் தெருவை சேர்ந்தவர் மகேஷ் கார்த்திக் (வயது 34). இவரது மனைவி பார்வதி (23). இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் திருமணத்திற்கு பிறகு முதலிமார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் மகேஷ் கார்த்திக் கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு சென்னைக்கு சென்றார். இதையடுத்து மனைவி பார்வதியை அருகு விளையில் உள்ள அவரது தந்தை வீட்டில் விட்டு சென்றார். நேற்று காலை சென்னைக்கு சென்ற மகேஷ் கார்த்திக் ஊருக்கு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப் பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்திருந்தது. பொருட்கள் சிதறி கிடந்தன. அங்கிருந்த 25 பவுன் நகை கள் திருடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மகேஷ் கார்த்திக் வடசேரி போலீ சுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். கைரேகை நிபு ணர்களும் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரே கைகளை பதிவு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். கொள் ளையன் ஒருவர் வீட்டின் மாடியில் ஏறி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ள னர். மகேஷ் கார்த்திக் வெளியூர் சென்று இருப் பதை அறிந்தே மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடு பட்டு உள்ளனர்.

    எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். மேலும் சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×