search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்ட தீயணைப்பு துறையின் சார்பில் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி
    X

    குமரி மாவட்ட தீயணைப்பு துறையின் சார்பில் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி

    • கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறையின் சார்பில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் தில் பள்ளிக் கல்வித்துறை, நில அளவைத்துறை, பத்தி ரப்பதிவுத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்துறை யின் சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தகுதி யான பயனாளிகளுக்கு உடனுக்குடன் சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வரு வாய்த்துறை யை சேர்ந்த கிராம நிர்வாக அலு வலர்கள், வருவாய் அலுவலர்கள், துணை தாசில்தார்கள், தாசில்தார்கள், உள்ளிட்டோர் பொது மக்களிடமிருந்து தங்களுக்கு வரும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இயற்கை இடற்பாடுகள், மீனவர் பிரச்சனை அதிகமாக உள்ளது. அனைத்து அலு வலர்களும் தங்களுடைய ஆளுமைக்குட்பட்ட பகுதிக ளிலுள்ள பிரச்சனைகளை தெரிந்து கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வருவாய் துறை அலுவலர்கள், அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மீட்புபணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நேரடியாக நடத்தப்பட்டது.

    பேரிடர் காலங்களில் செயல்படுத்தப்படும் மீட்புபணிகள் குறித்தும், தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும், விபத்திலிருந்து நம்மை எப்படி காப்பாற்றி கொள்வது என்பது தொடர்பாகவும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

    தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பேரி டர் காலங்களில் பொது மக்களை பாதுகாப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    குறிப்பாக கட்டிடம் மற்றும் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி மீட்டல், நைலான் வலை மூலம் மீட்டல், சிறப்பு தளவாடங் கள் மற்றும் மீட்பு உப கரணங்கள் செயல்முறை விளக்கம் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீயணைப்பு வீரர்களால் நடத்தப்பட்டது. இதனை கூடுதல் தலைமை செயலா ளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிர மணியம், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×