search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடி கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம்
    X

    மயிலாடி கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம்

    • திருமண மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
    • மயிலாடி பேரூராட்சி தலைவர் விஜயலெட்சுமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெசீம், மயிலாடி பால் பண்ணை தலைவர் பெருமாள், மயிலாடி பேரூர் தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் உள்ள ஒய்-48 மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மேயர் மகேஷ் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன், மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் நாகராஜன், துணைப் பதிவாளர்கள் கனகசுந்தரி, சங்கரன் (நாகர்கோயில் சரகம்) குருசாமி (பொது விநியோகத்திட்டம் நாகர்கோவில்),

    மயிலாடி பேரூராட்சி தலைவர் விஜயலெட்சுமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெசீம், மயிலாடி பால் பண்ணை தலைவர் பெருமாள், மயிலாடி பேரூர் தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×