போலி நகைகளை அடகு வைத்து சொகுசு வாழ்க்கை - தலைமறைவான பெண்ணை பிடிக்க 2 தனிப்படை

பல்வேறு பகுதிகளில் இதேபோல் போலி நகைகளை அடகு வைத்து இருப்பது தெரிய வந்ததுநாகர்கோவில் செட்டிகுளம் மற்றும் ஆசாரிபள்ளத்தில் சொகுசு பங்களா வீடு
போலி நகைகளை அடகு வைத்து சொகுசு வாழ்க்கை - தலைமறைவான பெண்ணை பிடிக்க 2 தனிப்படை
Published on

நாகர்கோவில்:

குமாரபுரம் அருகே உள்ள சித்திரங்கோடு பகுதி யில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சுரேஷ்.

இவரது நிதி நிறுவனத்திற்கு சம்பவத்தன்று பெண் ஒருவரும், வாலிபர் ஒருவரும் சென்றனர்.

அவர்கள் நகை ஒன்றை அடகு வைத்து பணம் பெற்று சென்றனர். பின்னர் அந்தப் பெண் கொடுத்த நகையை சுரேஷ் பரிசோதனை செய்து பார்த்தபோது போலி நகை என்பது தெரியவந்தது.

இது குறித்து சுரேஷ் கொற்றிகோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டனர். நிதி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது போலி நகைகளை அடகு வைத்தது நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜா (வயது 48) மற்றும் அவரது மனைவி அனுஷா என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஜேசுராஜாவை கைது செய்தனர். கைது செய்ய ப்பட்ட ஜேசு ராஜாவிடம் விசாரணை நடத்திய போது அனுஷா இவரது இரண்டாவது மனைவி என்பது தெரியவந்தது.

இவர்கள் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதேபோல் போலி நகைகளை அடகு வைத்து இருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஜேசுராஜாவிற்கு நாகர்கோவில் செட்டிகுளம் மற்றும் ஆசாரிபள்ளத்தில் சொகுசு பங்களா வீடு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போலி நகைகளை அடகு வைத்து ஜாலியாக இருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில் என்ற போலி தங்கக் காப்புகள் மற்றும் அடகு வைத்த ரசீதுகள் இருந்ததை போலீசார் கைப்பற்றி னார்கள்.

தலைமறைவான அனு ஷாவை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அனுஷா தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com