search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் சப்பரவாகனத்தில் நடராஜபெருமான்- சிவகாமி அம்பாள் பவனி
    X

    கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் சப்பரவாகனத்தில் நடராஜபெருமான்- சிவகாமி அம்பாள் பவனி

    • மூலவரான குகநாதீஸ்வரர் மிக உயரமான 5 ½ அடி உயர சிவலிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார்
    • ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்றுஆனி திருமஞ்சன விழா

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில்ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்குமுந்தைய பழமையான கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டிஉள்ளதாக வரலாற்றுச் சான்றுகள்கூறுகின்றன. குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை இங்கு வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணம் ஆயிற்று. இங்கு உள்ள மூலவரான குகநாதீஸ்வரர் மிக உயரமான 5 ½ அடி உயர சிவலிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். அப்படிப்பட்ட புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்றுஆனி திருமஞ்சன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு ஆனி உத்திரத்தன்று திருமஞ்சன விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பின்னர் 9.45 மணிக்கு வாகன பவனிநடந்தது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றிவலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    அதன் பின்னர் பகல் 12மணிக்கு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×