search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே சுற்றுலா வாகனம் மோதி தொழிலாளி பலி
    X

    இரணியல் அருகே சுற்றுலா வாகனம் மோதி தொழிலாளி பலி

    • பார்வதிபுரத்தில் தந்தையிடம் பொருட்களை கொடுத்து விட்டு ஆனந்த், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்
    • கேரள பதிவு எண் கொண்ட சுற்றுலா வாகனம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள முத்தலகுறிச்சி என்ற இடத்தை சேர்ந்தவர் பத்மநாபபிள்ளை. இவரது மகன் ஆனந்த் (வயது 28), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    சம்பவத்தன்று பத்மநாப பிள்ளை பார்வதிபுரம் சென்றிருந்தார். அப்போது சில பொருட்களை கொண்டு வருமாறு ஆனந்திடம் போனில் கூறி உள்ளார். இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பார்வதிபுரத்தில் தந்தையிடம் பொருட்களை கொடுத்து விட்டு ஆனந்த், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். களியங்காடு அடுத்த சுங்கான்கடையில் அவர் வந்தபோது அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட சுற்றுலா வாகனம் வந்தது. அந்த வாகனம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காய மடைந்த ஆனந்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து இரணி யல்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×