search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை இடங்களை கே.எஸ்.அழகிரி இன்று பார்வையிட்டார்
    X

    குமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை இடங்களை கே.எஸ்.அழகிரி இன்று பார்வையிட்டார்

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை
    • பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    12 மாநிலங்கள் வழியாக 150 நாள் பயணமாக இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி வருகிற 7-ந் தேதி மாலை 3மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது .

    இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்த வும் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.

    பின்னர் ராகுல் காந்தி அன்று கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறார்.குமரி மாவட்டத்தில் 7,8,9,10-ந் தேதிகளில் அவர் பாதயா த்திரை மேற்கொள்கிறார்.

    11-ந் தேதி காலை திருவனந்தபுரம் வழியாக கேரளா செல்கிறார். குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி 4 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குமரி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

    இதைத்தொடர்ந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் இங்கே முகாமிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி குமரி மாவட்டம் வந்தார்.நாகர்கோவிலுக்கு வந்த அவர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்று வரும் பணி களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அங்கு 2-வது நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ராகுல் காந்தி அந்த மைதானத்தில் கேரவன் வேனில் தங்கு கிறார்.

    ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை வரும் நிர்வாகிகள் தங்குவதற்கும் அங்கு பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.அந்த பணிகளை கே.எஸ்.அழகிரி இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள இடங்க ளை பார்வையிட்ட அவர் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் விவரங்களையும் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வை யாளர் குண்டு ராவ், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, செல்லக்குமார், ஜெயக்குமார், எம்.எல். ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், மாவட்டத் தலை வர்கள் நவீன் குமார், கே.டி. உதயம், பினுலால்சிங் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையின் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை அவர் மேற்கொள்ள உள்ள பாதயாத்திரை நிகழ்ச்சி களில் சாலையின் இருபுற மும் கட்சியினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் இதற்காக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழகிரி கேட்டுக்கொண்டார்.

    ராகுல் காந்தி வரவேற்பு ஏற்பாடுகளை கண்காணிக்க 18 எம்.பி. எம்.எல். ஏ.க்கள் தலைமையில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

    Next Story
    ×