search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேறும் சகதியுமாக மாறிய கோட்டார் சாலை - வாகன ஓட்டிகள் அவதி
    X

    சேறும் சகதியுமாக மாறிய கோட்டார் சாலை - வாகன ஓட்டிகள் அவதி

    • சவேரியார் ஆலயம் முதல் கோட்டார் நாராயண குரு மண்டபம் வரை உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது
    • 4 சக்கர வாகனங்கள் செல்லும்போது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது சகதிகளை வீசி செல்வதால் அவர்கள் கடும் அவதி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட பகுதி களில் பாதாள சாக்கடை பணிகள் 95 சதவீதம் முடிவ டைந்துள்ளது. பிரதான சாலையாக கருதப்படும் கோட்டார் சாலையில் பாதாள சாக்கடைக்கான பணிகள் முடிவடைந்து உள்ளது.

    ஆனால் அந்தபகுதி களில் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை சாலை அமைக்கப்படாததால் சவேரியார் ஆலயம் முதல் கோட்டார் நாராயண குரு மண்டபம் வரை உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மட்டுமின்றி இரு சக்கர வாகனங்களும் சென்று வருகிறது. வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் சிக்கித் தவிக்கும் அவல நிலையை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு படுமோசமாக இந்த சாலை காட்சி அளிக்கிறது.

    சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னரும் பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் நாகர்கோ விலில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளது சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது .

    சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய செல்லக்கூட முடியாத அள விற்கு மோசமாக உள்ளது. சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரில் 4 சக்கர வாக னங்கள் செல்லும்போது இரு சக்கர வாகனங் களில் செல்பவர்கள் மீது சகதிகளை வீசி செல்வதால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

    பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சாலையில் உள்ள பள்ளங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதே போல் சவேரியார் ஆலயத்தில் இருந்து செட் டிக்குளம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து பஸ் போக்கு வரத்து நடந்து வருகிறது. இந்த சாலையின் தற்போது சேறும் சகதியமாக மாறி உள்ளது. சாலைகள் சேறும் சகதிகமாக காட்சி அளிப்ப தால் விபத்துக்கள் நடக்க வும் வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாக உரிய நடவ டிக்கை எடுக்கவேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×