search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
    X

    கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

    • முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பங்கேற்பு
    • நிகழ்ச்சிகளை பள்ளி இயற்பியல் முதுகலை ஆசிரியைஜேன் சில்வியா தொகுத்து வழங்கினார்.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் "சட்டமன்ற நாயகர்- கலைஞர்" விழா குழு சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சபாநாயகரும் "சட்டமன்ற நாயகர்- கலை ஞர்" விழா குழு உறுப்பின ருமான ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் நாகராஜன் முன்னிலைவகித்தார்.

    பள்ளி தலைமை ஆசிரியை பேபி வர வேற்றுப் பேசினார். விழா வில் தமிழக சட்டமன்ற பேரவை முன்னாள் செயலாளர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.

    விழாவில் மாணவி சுஷ்மா "கலைஞரின் திட்டங்களும் சாதனை களும்" என்ற தலைப்பிலும், மாணவி அபிநயா "கலைஞர்ஒரு சகாப்தம்" என்ற தலைப் பிலும், மாணவிதேவி சாதனா "கலைஞரின் திட்டங்கள்" என்ற தலைப் பிலும் மாணவி பிரபா ஏஞ்சல் "கலைஞரின் சட்டமன்ற சாதனைகள்" என்ற தலைப்பிலும், மாணவி சந்தியா "கலைஞரின் சாதனைகள்" என்ற தலைப்பிலும் பேசினார்கள். இதில் மாணவி அபிநயாவுக்கு முதல் பரிசும் மாணவி சந்தியாவுக்கு 2-வது பரிசும் மாணவி பிரபா ஏஞ்சலுக்கு 3-வது பரிசும் கிடைத்தது.

    பரிசு பெற்ற இந்த மாணவிகளுக்கு முன்னாள் சபாநாயகர் ஆவுடை யப்பன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மோகன், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செய லாளரும் முன்னாள் பேரூ ராட்சி வார்டு கவுன்சிலரு மான வைகுண்ட பெரு மாள், மாநில தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தன், பேரூர் தி.மு.க. அவைத் தலைவர் சுப்பையா பிள்ளை, மாவட்ட தி.மு.க. பொறி யாளர் அணி துணை அமைப்பாளர் தமி ழன்ஜானி, கிருஷ்ண

    குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் சட்டமன்ற பேரவை இணை செயலாளர் பாண்டியன் நன்றி கூறி னார்.

    நிகழ்ச்சிகளை பள்ளி இயற்பியல் முதுகலை ஆசிரியைஜேன் சில்வியா தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×