search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் இன்று 4-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு நீடிப்பு
    X

    கன்னியாகுமரியில் இன்று 4-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு நீடிப்பு

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதம்
    • கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பவு ர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் பவுர்ண மியையொட்டி கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட கடல் நீர்மட்டம் தாழ்வு காரண மாக கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலையில் 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்க ப்பட்டது.

    மழை காரணமாக இன்று காலை 4-வது நாளாக கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து காணப்ப ட்டது. அதேபோல இன்னொ ரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்த ளிப்பா கவும் காணப்படுகிறது.

    கடல் நடுவில் அமை ந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமை ந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்ப ட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அர பிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், சீற்ற மாகமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்க ப்படவில்லை. இதனால் இன்று காலை விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறை நுழைவு வாயிலில் சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் காத்து இருந்தனர். இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலை க்கு திரும்பியது. இதைத்தொ டர்ந்து 3 மணி நேரம் தாமதமாக 11 மணிக்கு விவே கானந்தர் மண்டப த்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். திருவ ள்ளுவர் சிலைக்கும். விவேகானந்தர் மண்டப த்துக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடை பெறவில்லை.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்ப ட்டது. கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடித் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் இன்று காலை கன்னியா குமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்த ப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×