காக்கவிளை - பஞ்சந்தாங்கி சாலை சீரமைப்பு

அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்ரூ.1 கோடியே 3 லட்சம் செலவில் நடைபெறுகிறது
காக்கவிளை - பஞ்சந்தாங்கி சாலை சீரமைப்பு
Published on

மார்த்தாண்டம், ஜூன்.8-

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல் பேரூராட்சியில் உள்ள காக்கவிளை- பஞ்சந்தாங்கி செல்லும் சாலை பல வருடங்களாக செப்பனிடாத காரணத்தினாலும், கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுத டைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாக னங்களில் செல்வதற்கும் முடியாத நிலையில் அவதிப் பட்டனர். இதனால் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து காக்கவிளை- பஞ்சந்தாங்கி செல்லும் சாலையை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வந்தார்.

இதனையடுத்து நபார்டு சாலைகள் அலகின் மூலம் சாலை தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் காக்க விளை-பஞ்சந்தாங்கி சாலையை சீரமைக்க ரூ.1 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த சாலை சீரமைக்கும் பணியை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் சிவராஜ், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் டி.பி. ராஜன், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், கருங்கல் பேரூராட்சி காங்கி ரஸ் தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி தி.மு.க. செயலாளர் அருள் ராஜ், வார்டு உறுப்பினர் ஜோபின் சிறில் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com