search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி படகுத்துறையில் தூர் வாரும் பணி தீவிரம்
    X

    கன்னியாகுமரி படகுத்துறையில் தூர் வாரும் பணி தீவிரம்

    • குவிந்து கிடக்கும் மணல் ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றம்
    • பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணி களுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல்போக்குவரத்து கழகம்படகுபோக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற் காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு கடலில் உல்லாச பயணம் செய்வதற்காக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 அதிநவீனசொகுசு படகுகளும் உள்ளன.

    இந்த5 படகுகளும் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளன. இந்த படகு துறையில் கடும் இடநெருக்கடிக்கு இடையே இந்த படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளதால் கடல் சீற்றம், கடல் கொந்த ளிப்பு, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை சீற்றங்களின் போது இந்த படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து சேதமடைந்து வருகின்றன. அ

    துமட்டுமின்றிநீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன. படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அவ்வப்போது அகற்றாததன் காரணமாக இந்த படகுகள் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கும்போது தரை தட்டி நிற்பதாக கூறப்படுகிறது. இதைத்தொ டர்ந்து இந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளது. அதன் பயனாக 5 ஆண்டு களுக்கு பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் தூர்வாரும் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை ராட்சத பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்ததூர்வாரும் பணிரூ.5 லட்சம் செலவில் நடைபெற்றுவருகிறது. இதுவரை சுமார்50டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது

    Next Story
    ×