search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    நாகர்கோவிலில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

    • பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும்
    • ஆன்லைன் ரம்மி, லாட்டரியை தடை செய்ய வேண்டும்

    நாகர்கோவில்:

    பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும், ஆன்லைன் ரம்மி, லாட்டரியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் லீலா பாய் தலைமை தாங்கினார். தென் மாநில இணைச்செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட தலைவர் பாபா காசிம் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×