

நாகர்கோவில், அக்.11-
குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக இருந்த ராஜேஷ், நெடுஞ்சாலைத்துறை தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டார். சமூக பாதுகாப்புத்துறை தனித் துணை வட்டாட்சியர் ராஜா சிங், அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.