search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட சுடுகாட்டை அகற்ற வேண்டும்
    X

    சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட சுடுகாட்டை அகற்ற வேண்டும்

      நாகர்கோவில்:

      நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் சாஸ்தான் கோவில் தெரு வைச் சேர்ந்த மக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

      நாங்கள் சாஸ்தான் கோவில் தெருவில் தலை முறை தலை முறையாக அரசு நிர்வாகத்தால் பட்டா வழங்கப்பட்டு கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம்.

      இந்த நிலையில் சாஸ்தான் கோவிலுக்கு உட்பட்ட ஊர் நிர்வாகத்தினர் எங்கள் குடியிருப்பு அருகில் கோவில் பயன்பாட்டுக்கு என்று கூறி இடத்தை வாங்கி சுடுகாடு அமைத்துள்ளனர்.

      தற்போது அங்கு இறுதி சடங்கும் நடந்து உள்ளது. திடீரென அமைக்கப்பட்டு உள்ள சுடுகாடு பகுதியில் பல தரப்பட்ட குடும்ப மக்களின் கோவில்கள் உள்ளது.

      சுடுகாட்டை ஒட்டிய பகுதியில் முதியோர்கள், குழந்தை கள், பச்சிளங்குழந்தைகள் வசித்து வருகின்றனர். மேலும் சுடுகாட்டிற்கு வழிப்பாதை ஏதும் இல்லை. பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சுடுகாடு அமைக்கப்படக்கூடாது.

      குடியிருப்பு இல்லாத பகுதியின் ஒதுக்குப்புறத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என்ற சட்டங்கள் உள்ளன. ஆனால் அதை மதிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. எனவே சுடுகாட்டை அகற்ற வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      Next Story
      ×