search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் டிரைவர் வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது எப்படி?
    X

    நாகர்கோவிலில் டிரைவர் வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது எப்படி?

    • பணத்துக்கு ஆசைப்பட்டு கொள்ளை கும்பலுடன் இணைந்த கவுரி
    • தலைமறைவாகி உள்ள மற்ற 4 பேரையும் பிடித்தால் தான் மேலும் பல தகவல்கள் தெரியவரும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர் சாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர், தற்போது இங்கு வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று முன்தினம் மாலையில் ஜாஸ்மின் அவரது மகள் மற்றும் மாமியார் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றனர். வீட்டில் முகமது உமர் ஷாகிப் மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது வீட்டிற்குள் புகுந்த கும்பல் முகமது உமர் சாஹிப்பை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள். பின்னர் அவரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்தனர். அப்போது வீட்டிற்கு வந்த ஜாஸ்மினை பார்த்து, கொள்ளை கும்பல் அங்கி ருந்து தப்பி ஓடி விட்டது. கொள்ளை கும்பல் வந்த காரையும், கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து முகமது உமர் ஷாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். பொதுமக்கள் பிடியிலிருந்து கொள்ளை யனையும், காரையும் மீட்டனர். பிடிபட்ட கொள்ளையனிடம் விசாரணை நடத்தியபோது கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் குறித்து முழு தகவலையும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீ சார் கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இட லாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த மீரான், இடலாக்குடியை சேர்ந்த ரஹீம், அழகிய பாண்டிய புரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரஹீம், அமீர், கவுரி 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ரஹீம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    கோட்டார் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் ரஹீம் பெயர் இடம் பெற்றுள்ளது. அமீர் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். தலைமறை வாகியுள்ள மற்ற 4 பேரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து போலீஸ் விசார ணையில் பரபரப்பு தகவல் கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட ரஹீம் வீட்டிற்கு கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ் வந்து சென்றுள்ளார். அமீருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் சீக்கிரம் பணக்காரராக என்ன செய்யலாம் என்று ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது அனைவரும் இணைந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். ஆண்கள் ஒன்றாக இணைந்து வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது கஷ்டம் என்பதால் பெண் ஒருவரையும் இந்த கூட்டத் தில் இணைத்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அப்போது அமீர் தனக்கு பழக்கப்பட்ட பெண் ஒருவர் இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்த கவுரியை இணைத்துள்ளனர். கவுரி ஏற்கனவே வறுமையில் இருந்து வந்த நிலையில் இவர்கள் அவருக்கு ரூ.3000 பணம் தருவதாக கூறியுள்ளார்கள். இதையடுத்து கவுரி இதற்கு சம்மதம் தெரிவித்து அவர்களுடன் சென்றுள்ளார். கொள்ளை கும்பல், முகமது உமர் ஷாகிப் வீட்டுக்குள் கிரகப் பிரவேசத்திற்கு அழைப் பிதழ் கொடுப்பது போல் உள்ளே புகுந்து இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ள னர்.

    தலைமறைவாகி உள்ள மற்ற 4 பேரையும் பிடித்தால் தான் மேலும் பல தகவல்கள் தெரியவரும். தப்பி சென்ற வர்கள் 10 பவுன் நகையையும் எடுத்துச் சென்றுள்ளனர். அதை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். முகமது உமர் ஷாகிப் வீட்டில் கொள்ளையர்கள் விட்டு சென்ற துப்பாக்கி பொம்மை துப்பாக்கி என்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளை கும்பல் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கி டையில் கைது செய்யப்பட்ட ரஹீம், கவுரி ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அமீர் சிகிச்சைக்காக ஆஸ்பத் திரியில் அனும திக்கப்பட்டுள்ளார்.

    கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கவுரிக்கு கொள்ளை கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக் தகவல் வெளியானது. கைதான கவுரி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் நில புரோக்கர் ஆவார். வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு விசா எடுத்து கொடுக்கும் ஏஜென்ட் ஆக இருந்து வந்துள்ளார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அமீர் வெளிநாடு செல்வதற்காக விசா வேண்டி கவுரியை சந்தித்துள்ளார். இதுதான் அவர்களுக்குள் ஏற்பட்ட முதல் சந்திப்பாகும். பின்னர் இருவரும் நல்ல நட்புடன் பழகி வந்தனர். ஏற்கனவே கவுரியின் குடும்பம் சற்று வறுமையில் வாடியது. இதை அறிந்த அமீர் அவருக்கு ஒரு யோசனையை கூறியுள்ளார். நீ, நான் மற்றும் எனக்கு தெரிந்த சிலர் ஒரு குழுவாக கூட்டு சேர்ந்து வீடுகளில் கொள்ளையடிக்கலாம். இதன் மூலம் நமக்கு அதிக அளவு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    முதலில் கவுரி இதற்கு சம்மதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் தனது குடும்பம் வறுமையில் வாடியதை எண்ணியதையடுத்து இதற்கு சம்மதம் தெரிவித்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முதல் கொள்ளை சம்பவத்திலேயே கவுரி போலீசில் சிக்கிக்கொண்டார்.

    Next Story
    ×