search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்த நாளையொட்டி நாகர்கோவிலில் பெரியார் சிலைக்கு மாலை
    X

    பிறந்த நாளையொட்டி நாகர்கோவிலில் பெரியார் சிலைக்கு மாலை

    • வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நாகர்கோவில் :

    தந்தை பெரியார் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் கேட்சன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், அணி அமைப்பாளர்கள் இ.என். சங்கர், அருண் காந்த் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவைத் தலைவர் சேவியர் மனோகரன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் மற்றும் வடிவை மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன், அந்தோணி ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் முத்தரசன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×