search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றூர் அருகே சிவசேனா கட்சி தலைவர் வீட்டில் இருந்து விநாயகர் சிலைகள் பறிமுதல்
    X

    ஆற்றூர் அருகே சிவசேனா கட்சி தலைவர் வீட்டில் இருந்து விநாயகர் சிலைகள் பறிமுதல்

    • திருவட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைக்க போலீசார் சார்பில் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.
    • பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவட்டார் :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப டவுள்ள நிலையில் மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 5000-க்கும் மேற்பட்ட சிலைகள் பொதுஇடங்கள் மற்றும் ஆலயங்களில் பூஜையில் வைக்கபட்டு வருகிற 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கன்னியா குமரி, சொத்த விளை கடற்கரை, குழித்துறை, தாமிரபரணி, திற்பரப்பு ஆறுகளில் விநாயகர் சிலைகள் பூஜைகள் செய்து ஊர்வலமாக எடுத்து கொண்டு விஜர்சனம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் மாவட்டத்தில் ஆற்றூர், திருவட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைக்க போலீசார் சார்பில் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.

    இதேபோல் திருவட்டார் அருகே தோட்டவாரம் பகுதியில் சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ்பிரகாஷ் என்பவரது வீட்டில் பொதுஇடங்களில் பூஜையில் வைப்பதற்கு வழங்குதற்கான வைக்க பட்டிருந்த விநாயகர் சிலை களை நள்ளிரவில் திரு வட்டார் தாசில்தார் முருகன் தலைமையிலான வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் நள்ளி ரவில் திடீரென வீட்டிற்குள் புகுந்து பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த வருடம் விநாயகர் சிலைகள் பூஜைகளில் வைக்கபட்ட பகுதிகளிலும் தற்போது விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×