search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய சவேரியார் கத்தோலிக்கப் பொறியியல் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்
    X

    தூய சவேரியார் கத்தோலிக்கப் பொறியியல் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்

    • ஒரு நாள் சிறப்பு பொதுநல மருத்துவ முகாம் மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மருத்துவ முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நாகர்கோவில் :

    சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்கப் பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் சிறப்பு பொதுநல மருத்துவ முகாம் மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் டாக்டர் ஷீன் குமார் வரவேற்றார். கல்லூரி தாளாளர் டாக்டர் மரிய வில்லியம் தலைமை தாங்கினார். நாகர்கோவில் பென்சாம் மருத்துவமனை தலைமை மருத்துவர் எபனேசர் பென்சாம், முகாமினை தொடங்கி வைத்து பேசினார். நாகர்கோவில் டவுண் மற்றும் சுப்ரீம் ரோட்டரி மன்றங்களை சார்ந்த மீரான் கான் சலீம் மற்றும் ஸ்ரீதர் முகமத் இக்பால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர். கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஸ்வரன், துணை முதல்வர் டாக்டர் கிறிஸ்டஸ் ஜெயசிங் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

    மருத்துவ முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் டாக்டர் ஷின் குமார். தேசிய மாணவர் படை அலுவலர் டாக்டர் எட்வின் கிளாட்சன். நாட்டு நலத்திட்ட அலுவலர்கள் பேராசிரியர் ஆக்னல் லிவ்விங்ஸ்டன் மற்றும் ஜாண்பால் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் சிறப்பாக செய்தனர்.

    Next Story
    ×