search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை-குழித்துறையில் தீயணைப்பு படையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை
    X

    தக்கலை-குழித்துறையில் தீயணைப்பு படையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை

    • வெள்ளத்தில் சிக்கியவர்களை லைப் பாய், ரப்பர் படகு ஆகியவற்றின் மூலம் மீட்பது
    • பொது மக்கள் யாராவது ஆற்றில் தவறி விழுந்தால் காப்பாற்றி கரை சேர்ப்பது

    கன்னியாகுமரி :

    தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தக்கலையில் நிலைய அலுவலர் தலைமையில் கல்குறிச்சி பச்சைகுளத்தில் மீட்பு ஓத்திகை நடைபெற்றது. இதில் வெள்ள காலங்களில் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை கொண்டு, எவ்வாறு தங்களை காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்ட்டது.

    அதன்படி காலி ரப்பர் குடங்கள், காலி கியாஸ் சிலிண்டர்கள், வாழை தண்டுகள், மூங்கில் கம்புகள், தண்ணீர் பாட்டில்கள், தென்னை குடுவைகள் ஆகியவற்றை கொண்டு வெள்ளத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை லைப் பாய், ரப்பர் படகு ஆகியவற்றின் மூலம் மீட்பது, அவர்களுக்கு தேவையான முதலுதவி அளிப்பது ஆகியவை குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    குழித்துறை தீயணைப்பு துறை சார்பில் இன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. வெள்ளப்பெருக்கின் போது, பொது மக்கள் யாராவது ஆற்றில் தவறி விழுந்தால் காப்பாற்றி கரை சேர்ப்பது, கால்நடைகள் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்தால் காப்பாற்றி கரை சேர்ப்பது போன்ற ஒத்திகை பயிற்சிகள் தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்றது

    Next Story
    ×