என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாழை, மரவள்ளி சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்
- வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28-ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம்.
- தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தகவல்
நாகர்கோவில்:
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் சாகு படி செய்யப்பட்டுள்ள முக் கிய பயிர்களான வாழை மற் றும் மரவள்ளி போன்ற பயிர் களில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. சுமார் 5,063 ஹெக்டர் பரப் பளவில் வாழை மற்றும் 1,437 ஹெக்டர் பரப்பளவில் மர வள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பயிர்கள் சாகுபடி செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை. மழைபொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்டநிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை மற்றும் புயல் ஆகியவற்றால் இழப்பு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங் கப்படுகிறது. குத்தகை விவசா யிகளுக்கும் இத் திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன் பெறலாம். வாழை விவசாயி கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,182 பிரீமியமாக செலுத்தி ரூ.83,650 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரிமியமாக ரூ.1,420 செலுத்தி ரூ.28,400 இழப்பீடாகவும் பெறலாம்.
கடன் பெறும் விவசாயிக ளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங் கிகள் மூலம் விருப்பத்தின் பேரில் பிடித்தம் செய்து காப் பீடு நிறுவனங்களுக்கு செலுத்தலாம். கடன் பெறா விவசாயிகள் தங்களது அரு காமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் மற் றும் பொது சேவை மையங் கள் மூலம் பிரீமியம் செலுத்த லாம். இதற்கு தேவையான ஆவணங்கள் நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு விவரம் ஆகும். வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28-ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்களது பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயிர் காப் பீடு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்