search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம்
    X

    குமரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம்

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிக்கை
    • வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28 - ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் முக்கிய தோட்டக் கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முக்கிய பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    சுமார் 5063 ஹெக்டர் பரப்பளவில் வாழை மற்றும் 1437 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பயிர்கள் சாகுபடி செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல் , வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் இழப்பு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படு கிறது.

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன் பெற லாம். வாழை விவ சாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,182 பிரீமியமாக செலுத்தி ரூ. 83,650 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரிமியமாக ரூ.1420 செலுத்தி ரூ.28,400 இழப்பீடா கவும் பெறலாம்.

    கடன் பெறும் விவ சாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் பிடித்தம் செய்து காப்பீட்டு நிறுவ னங்களுக்கு செலுத்தலாம். கடன் பெறாத விவசாயிகள் தங்களது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம். அருகாமையிலுள்ள தேவையான ஆவணங்கள் நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம், காப்பீடு செய்வதற்கான காலக்கெடு விபரம், வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28 - ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம்.

    மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலு வலகங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது.

    Next Story
    ×