search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை வல்லுனர்கள் ஆய்வு
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை வல்லுனர்கள் ஆய்வு

    • 120 அடி உயரம் 60 அடிநீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம்
    • கட்டுமான பணிகளுக்கான மண் பரிசோதனை, கோபுரம் அமைப்பு உள்ளிட்டவை ஆராய்ந்து ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில் :

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும்ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்நிலையில் அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கு பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதனைத் தெடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம் 60 அடிநீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டு வதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது. இதேபோல கோவிலின் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைய இருக்கும் இடத்தில் நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்க பல்வேறு ஆயுத்த பணிகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் செய்து வரு கின்றனர். இந்நிலையில், மாநில வல்லுனர் குழு வடிவமைப்பு பொறியாளர் முத்துச்சாமி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கோபுரம் அமையவிருக்கும் இடத்தில் ஆய்வு செய்தனர்.

    இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், மண்டல ஸ்தபதி செந்தில், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் ஆனந்த், உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்ட னர். இதில் கோவில் கோபுரம் கட்டுமான பணிகளுக்கான மண் பரிசோதனை, கோபுரம் அமைப்பு உள்ளிட்டவை ஆராய்ந்து ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×