search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று தி.மு.க. இளைஞர்-மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்
    X

    நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம் 

    நாகர்கோவிலில் இன்று தி.மு.க. இளைஞர்-மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்

    • இந்தி திணிப்பையும், ஓரே நுழைவு தேர்வையும் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி கோஷம்
    • கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

    நாகர்கோவில்:

    இந்தி திணிப்பையும் ஒரே நுழைவு தேர்வையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாண வரணி, இளைஞர் அணி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா ளரும் மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்.

    கிழக்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் சிவராஜ் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கிழக்கு மாவட்ட அவை தலைவர் எப்.எம். ராஜ ரத்தினம், பொருளா ளர் கேட்சன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், ராஜன், புஷ்பலீலா ஆல்பன் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, தாமரை பாரதி, துணை செயலாளர் பூதலிங்கம்,மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பிராங்கி ளின், பாபு, லிவிங்ஸ்டன், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.என் சங்கர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ததேயுபிரேம்குமார் நன்றி கூறினார். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட் டத்தில் கோஷங்கள் எழுப் பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மேயர் மகேஷ் பேசுகையில் மத்திய அரசு இந்தியை எல்லா இடங்களிலும் திணித்து வருகிறது.

    தமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க விட மாட்டோம். கடந்த நாடாளு மன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதி களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 40தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×