search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில்  கும்பப்பூ சாகுபடிக்கு 92 மெட்ரிக் டன் விதைகள் வினியோகம்
    X

    குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடிக்கு 92 மெட்ரிக் டன் விதைகள் வினியோகம்

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • உரிய ஆவணங்களுடன் அதற்குரிய காப்பீடு கட்டணம் செலுத்தினால் பயன்பெறலாம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கும்பப்பூ பருவத்தில் நெல் சாகுபடி செய்வதற்கு தேவையான நெல் விதைகள் வேளாண்மை துறை மூலம் வினியோகம் செய்திட 80 மெட்ரிக் டன் இலக்காக பெறப்பட்டது. இதற்கு தேவையான விதைகள் அரசு விதைப்பண்ணை, திருப்பதிசாரம் மற்றும் உதவி விதை அலுவலர்க ளால் விவசாயிகளின் வயலில் விதைப்பண்ைண அமைக்கப்பட்டு 114 மெட்ரிக் டன் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 92 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு கும்பப்பூ பருவத்தில் சாகுபடி செய்வதற்காக வினியோகம் செய்யப் பட்டுள்ளது.

    எனவே விவசாயிகள் தற்போது கும்பப்பூ பரு வத்தில் சாகுபடி செய்ய தேவையான விதைகளை பெற தங்கள் தாலுகா வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளவும், மேலும் அடுத்த ஆண்டு கன்னிப்பூ பருவத்திற்கு விவசா யிகளுக்கு தேவையான விதைகளை வினியோகம் செய்ய 102 எம்.டி. இலக்காக பெறப்பட்டுள்ளதால் அதற்கு தேவையான விதை களை உற்பத்தி செய்ய இந்த ஆண்டு கன்னிப்பூ பரு வத்தில் 110 ஏக்கர் பரப்பிற்கு அம்பை 16, டி.பி.எஸ்.- 5 மற்றும் பாரம்பரிய ரகங்க ளான பூங்கார், கருங்குறுவை ஆகிய ரகங்கள் அரசு விதைப்பண்ணை, திருப்பதி சாரம் மற்றும் உதவி விதை அலுவலர்களால் விவசாயி களின் வயலில் விதைப் பண்ணை அமைக்கப் பட்டுள்ளது.

    மேற்படி விதைப் பண்ணைகள் விதைச்சான்று துறையினரால் உரிய ஆய்வு மேற்கொண்டு சான்றளிக் கப்பட்டு ஆதாரம் மற்றும் சான்று விதைகளாக வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயி களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

    மேலும் கும்பப்பூ பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்து அதனை காப்பீடு செய்ய உரிய ஆவணங்களுடன் அதற்குரிய காப்பீடு கட்டணம் செலுத்தினால் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×