நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.23 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள்

மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்ரூ.18.50 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.23 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள்
Published on

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. தினமும் சாலை பணி உள்ளி ட்ட மேம்பாட்டு பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து வருகிறார்.

இன்று 4-வது வார்டுக்குட்பட்ட ராஜலெட்சுமி நகர் தெருக்களில் ரூ.18.50 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

6-வது வார்டுக்குட்பட்ட ஒய்.டபிள்யூ.சி.ஏ. தெருவில் ரூ.2.80 லட்சம் செலவில் பேவர் பிளாக் மறுசீரமைக்கும் பணி மற்றும் 49-வது வார்டுக்குட்பட்ட சி.டி.எம்.புரம் குறுக்கு தெருக்களில் ரூ.1.67 கோடி மதிப்பில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரம ணியம், உதவி பொறியாளர் ராஜா, தொழில்நுட்ப அலுவலர் தேவி, சுகாதார ஆய்வாளர்கள் மாதவன்பிள்ளை, சத்யராஜ், ராஜா, கவுன்சிலர் ஜெயவிக்ர மன், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.குமரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடந்து வருகிறது.

அகஸ்தீஸ்வரம் வட்டார வள மையம் சார்பில் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியில் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்களு க்கான பயிற்சி இன்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் பிரபாகர் தலை மை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் துரைராஜ், ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து பேசியதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநி திகளுக்கு பள்ளி மேலாண்மை குழு பொறுப்புகள் என்ன? பள்ளி மேலாண்மை குழு மூலம் அரசு பள்ளி வளர்ச்சி மற்றும் செயல்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் அரசின் கட்டுப்பா ட்டில் உள்ளது. அதனால் சில வளர்ச்சி பணிகள் மாநக ராட்சியால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இணைக்கும் வகையில் அரசுக்கு எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைக்கும் நிலையில் உள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் என்னென்ன மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும் என கணக்கிட்டு மாநகராட்சி நிதியில் பணிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆசி ரியர் பயிற்றுநர்கள் ஜெசிகா மேரி, முருகேசன், ரெஜி, ரவிக்குமார், ஜான்சன், பால்மணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com