search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.52 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.52 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 33-வது வார்டு சாய்நகர்தெருவில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 1-வது வார்டு வீராணி பூங்கா அருகில் உள்ள தெருவில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. 30-வது வார்டு வரது தெருவில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும், 33-வது வார்டு சாய்நகர்தெருவில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும், 44-வது வார்டு செயின்ட் ஆன்றனி தெருவில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும், 26-வது வார்டு ஊட்டுவாழ் மடம், சானல் கரை பகுதியில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, உதவி பொறியாளர்கள் சந்தோஷ், ராஜசீலி, மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜ், அமல செல்வன், சந்தியா, கவுசிகி, நவீன்குமார், சொர்ணத்தாய், சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், மாணவர் அணி அருண்காந்த், பகுதி செயலாளர்கள் சேக் மீரான்,

    ஜீவா, வட்ட செயலாளர் சாகுல் ஹமீது உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×