search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில்  சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி
    X

    சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி

    • கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்
    • கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயி ரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். சுய உதவிகுழுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.80 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், சுய உதவிகுழுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டிலும், அதிக பட்ச கடனாக ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்ப டுகிறது.

    கைவினை கலைஞர்க ளுக்கு ஆண்களுக்கு 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.

    சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்க ப்படுகிறது. சுய உதவி குழுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தின கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியிலும் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது.

    மேலும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற் கல்வி, தொழில் நுட்பக்கல்வி பயில்பவர்க ளுக்கு அதிகப்பட்சமாக தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டியிலும், சுய உதவிகுழுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தின் கீழ் மாணவர்க ளுக்கு 8 சதவீத வட்டியிலும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டியிலும் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    எனவே குமரி மாவட்டத் தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை, அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும்தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, ஒட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண் டும்.

    கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மைச்சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×