search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.10 லட்சம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
    X

    ரூ.10 லட்சம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    • கருங்கல் தபால் நிலையம் - கூனாலுமூடு சாலையில் நடைபெறுகிறது
    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

    கன்னியாகுமரி :

    கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட கருங்கல் தபால் நிலையம் - கூனாலுமூடு சாலை சீரமைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இச்சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாமல் காணப்பட்டது. இதனால் இந்த சாலையை கான்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க பேரூராட்சி நிதியிலிருந்து ரூ.10லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த தொகையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பேரூராட்சி தலைவர் சிவராஜ் ஆகியோர் சேர்ந்து தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன், வார்டு உறுப்பினர்கள் டெல்பின், ஜெயக்குமார், வழக்கறிஞர் ஜோபின் சிறில், ஜெஸ்டின் வினோசிங், ஆஸ்டின், கருங்கல் பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், கருங்கல் பேரூர் தி.மு.க. செயலாளர் அருள்ராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×