search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.74 ஆயிரம் வசூல்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.74 ஆயிரம் வசூல்

    • பக்தர்ளுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது
    • உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நா ட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்ம னை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

    இங்கு வரும் பக்தர்ளுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும், கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் திருக்கோவில் நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், நாகர்கோ வில் இந்து சமய அறநிலை யத் துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பொருளாளர் கண்ணதா சன், கணக்கர் முருகையா ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் காணிக்கையாக ரூ.74 ஆயிரத்து 573 வசூல் ஆகி இருந்தது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளா கத்தில் வைக்கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் எண்ணப்ப ட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×