search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.69 ஆயிரம் வசூல்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.69 ஆயிரம் வசூல்

    • உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
    • கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் எண்ணப்படவில்லை.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இந்த அன்னதான திட்டம், பக்தர்களின் நன்கொடை மூலமும், கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    இந்த மாதம் அன்னதான உண்டியல் நேற்று மாலை திறந்து எண்ணப்பட்டது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் சுஜித், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் கணக்காளர் கண்ணதாசன், பொரு ளாளர் முருகையா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

    இதில் காணிக்கையாக ரூ.69 ஆயிரத்து 339 வசூல் ஆகி இருந்தது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் எண்ணப்படவில்லை.

    Next Story
    ×