search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.49ஆயிரம் வசூல்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.49ஆயிரம் வசூல்

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
    • 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்ட பத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டி யல் மூலம் கிடைக்கும் வரு மானம் மூலமும் இந்த அன்ன தான திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல்நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ரமேஷ், கணக்காளர் ஸ்ரீ ராமச் சந்திரன் ஆகியோர் முன்னி லையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    இதில் காணிக்கையாக ரூ.49ஆயித்து193வசூல் ஆகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர் கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவில் வளாகத் தில் வைக்கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப் படவில்லை என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×