search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.11 லட்சம் வசூல்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.11 லட்சம் வசூல்

    • உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது.
    • உண்டியல் மூலம் ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்து 347 ரொக்க பணம் வசூலாகி உள்ளது.

    கன்னியாகுமரி, நவ.7-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும் நேற்று திறந்து எண்ணப் பட்டன. குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்கா ணிப்பாளரும், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் அதிகாரிகள் முன்னி லையில் நேற்று திறந்து எண்ணப் பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது. மாலை 3 மணி வரை நடந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த வெளிமாநில சுற்றுலா பயணிகளும் குமரி மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பணியாளர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் ஈடுபட்டனர்.

    இதில் உண்டியல் மூலம் ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்து 347 ரொக்க பணம் வசூலாகி உள்ளது. இது தவிர 3 கிராம் 400 மில்லி கிராம் தங்கமும், 12 கிராம் 200 மில்லி கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி இருந்தது.

    Next Story
    ×