search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1¼ லட்சம் வசூல்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1¼ லட்சம் வசூல்

    • பக்தர்ளுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்ளுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழக அரசு கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்ப ட்டுள்ளஅன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் செயல்படுத்தி வருகிறது.

    இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று மாலை திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 611 வசூல் ஆகி இருந்தது.

    இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள 17 நிரந்தர உண்டி யல்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×