search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளில் கழிவுநீர் வெளியேற்றும் குழாய் அடைப்பு
    X

    வீடுகளில் கழிவுநீர் வெளியேற்றும் குழாய் அடைப்பு

    • மக்கள் விரோத நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    குமரி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஓடைகளில் விடாமல் வீட்டிற்குள்ளேயே உறிஞ்சி குழாய் அமைத்து விட வேண்டும் என பொது மக்களுக்கு விரோதமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேரூ ராட்சி நிர்வாகமும் இதனை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டிவருகிறது.

    இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களை உறிஞ்சி குழாய் அமைத்திட நிர்ப் பந்தப்படுத்தி வருகிறது. வீட்டில் உறிஞ்சி குழிகள் அமைத்து பராமரிக்க ரூ.1 லட்சம் செலவாகும். ஏழை மக்கள் இதற்கு எங்கு செல்வார்கள்.

    சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில் நகராட்சித்துறை அமைச்சர், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். அந்த நிதியில் இருந்து பேரூராட்சி பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வீடுகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும். பிற மாவட்டங் களில் இதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், குமரி மாவட்டத்தில் பொதுமக்களை தொடர்ந்து துன்புறுத்தி இதனை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் வற்புறுத்தி வருமானால் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×