search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே பணத்தகராறில் மோதல்
    X

    களியக்காவிளை அருகே பணத்தகராறில் மோதல்

    • மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்
    • ளியக்காவிளை போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் குறுமத்தூர் பகுதியை சார்ந்த பிறசோபன் என்பவருக்கு பணம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    நேற்று பிறசோபன் வீட்டிற்கு சென்று ராஜேஷ் பணம் திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் 2 பேரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

    இதில் 2 பேருக்கும் தலை யில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து பிறசோபன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியிலும், ராஜேஷ் குழித்துறை ஆஸ்பத்திரியிலும்,சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்கள் கொடுத்த புகாரின்அடிப்படையில் களியக்காவிளை போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×