search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சவேரியார் ஆலயம் - செட்டிக்குளம் சாலையில் பஸ்கள் இயக்கம்
    X

    சவேரியார் ஆலயம் - செட்டிக்குளம் சாலையில் பஸ்கள் இயக்கம்

    • பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்தது.
    • தற்பொழுது பஸ்கள் பரிசாத்த முறையில் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிரதான சாலைகளான கோட்டார் சாலையில் தற்பொழுது பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    சவேரியார் ஆலயம் முதல் செட்டிகுளம் வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றதையடுத்து அந்த வழியாக சென்ற பஸ்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது.

    இதனால் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து குளச்சல், களியக்காவிளை, பார்வதிபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் சவேரியார் ஆலயத்தில் இருந்து ஈத்தாமொழி சந்திப்பு, பீச் ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் செட்டிகுளத்திற்கு வந்து சென்று வந்தது.

    கடந்த சில நாட்களாக செட்டிக்குளம்-சவேரியார் ஆலய சாலையில் ஓரளவு வேலைகள் முடிந்ததையடுத்து இரு சக்கர வாகனங்கள் அந்த வழியாக சென்று வந்தது.

    தற்பொழுது இந்த சாைலயில் பணிகள் நிறைவடைந்து உள்ளது. சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் மட்டும் பணிகள் முடிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் இன்று பரிசாத்த முறையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதையடுத்து குளச்சல், களியக்காவிளை, பார்வதிபுரத்திற்கு சென்ற பஸ்கள் அனைத்தும் சவேரியார் ஆலய சந்திப்பிலிருந்து நேராக செட்டிகுளத்திற்கு இயக்கப்பட்டது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், சவேரியார் ஆலய முதல் செட்டிகுளம் வரை உள்ள சாலையில் பணிகள் கிட்டத்தட்ட முடிக்கப்பட்டு விட்டது. சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் மட்டும் சில வேலைகள் முடிக்க வேண்டியது உள்ளது.

    தற்பொழுது பஸ்கள் பரிசாத்த முறையில் இயக்கப்பட்டு வருகிறது. சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படும் போது மீண்டும் பஸ்கள் மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×