சிற்றார்-2 அணையில் ரூ.3.50 கோடி செலவில் படகு குழாம் - கலெக்டர் அரவிந்த் தகவல்

பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் சிற்றார்-2 அணை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுஆய்வில் தளம் அமைக் கும் இடங்களை பற்றி யும் அதனுடைய தன்மை கள் பற்றியும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது
சிற்றார்-2 அணையில் ரூ.3.50 கோடி செலவில் படகு குழாம் - கலெக்டர் அரவிந்த் தகவல்
Published on

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் பேரூராட்சி துறையின் சார்பில், புதிய சுற்றுலா தளங்கள் அமைப்பது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் சிற்றார்-2 அணை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

சிற்றார்-2 அணையில் சுற்றுலா தொடர்பான வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் சிற்றார்-2 அணை பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதிய படகு குழாம் அமைத்தல் மற்றும் படகு குழாம் அமைக்கப்படும் இடம் அதற்கான கட்டிட வரைபடம் மேலும் படகு தளம் அமைக்கும் இடங்கள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டதோடு. ஆய்வில் தளம் அமைக் கும் இடங்களை பற்றி யும் அதனுடைய தன்மை கள் பற்றியும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் படகு குழாம்க்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு அதன் அருகி லேயே சுமார் 2.4 ஏக்கர் பூமியில் கார் பார்க்கிங் அமைக்கும் இடமும் தேர்வு செய்யப்பட்டு அதனையும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், அணையின் மற்றொரு பகுதியில் படகு தளம் அமைத்து சுற்றுலா படகில் செல்வோர்கள் இறங்குவதற்கு வசதியாக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பாக கூடார சுற்றுலா போன்ற அமைப்பு ஏற்ப டுத்தப்பட உள்ளது. படகு குழாம் மூலம் சுற்று லா செல்லும் சுற்று லாப் பயணிகள் அணைப்பகுதி களில் காணப்படுகின்ற தீவுகளுக்கும் சென்று திரும்பும் வகையில் படகு குழாம் அமைக்கப்படும். அவ்வாறு செல்லப்படும் தீவில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக மேற்கொள் ளப்பட இருகின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இது அனைத்தும் சூழியல் சுற்றுலா சார்ந்த வளர்ச்சிப்பணிகளாக அமையும். குறிப்பாக கூடாரம் வைத்து உணவகம் அமைப்பது போன்ற வசதிகள் காணப்படும்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுமாறும், அணையில் பராமரிப்பு இன்றி காணப்படுகின்ற பூங்காவினையும் பராமரிப்பு மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், சிற்றார்-2 அணையில் சுமார் ரூ.3.50 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் மேற்கொள்ளப்படுவதோடு. படகுகுழாம் சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கடையால் பேரூராட்சிக்குட்பட்ட திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா தளத்தை மேம்படுத்துவது குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஆய்வில் சுற்றுலா அலுவலர்கள் சீதாராமன், சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com