search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகுகள்
    X

    கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகுகள்

    • சின்னமுட்டத்தில் வலைகளை மீனவர்கள் சீர் செய்தனர்
    • தடைக்காலம் முடிய 4 நாட்களே உள்ளன

    கன்னியாகுமரி :

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்க ளில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெ ருக்கம் செய்யும் காலமாகும்.

    இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வரு கிறது. அதேபோல இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தடை அமலுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை யிழந்து வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன்சந்தைகளும் வெறிச் சோடி கிடக்கின்றன.

    இதற்கிடையில் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் தடை காலம் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள், தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சின்ன முட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் படகுகளை கரையேற்றி உடைந்த பகுதியை சீரமைப்பது, பச்சை நிற வர்ணம் தீட்டு வது, பழுதான என்ஜின்களை சீரமைப்பது போன்ற பணிகளில் தீவிர மாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி கொண்டி ருக்கிறார்கள். வருகிற 15-ந்தேதி அதி காலை 5 மணிக்கு சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து விசைப்பட குகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. இதனால் துறைமுகம் இப்போதே களை கட்ட தொடங்கி விட்டது.

    Next Story
    ×